×

பைக் மீது பஸ் மோதி காட்பாடி பெண் பலி மகன் கண்ணெதிரே சோகம் கண்ணமங்கலம் அருகே

கண்ணமங்கலம், செப்.17: கண்ணமங்கலம் அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் காட்பாடியை சேர்ந்த பெண் மகன் கண்ணெதிரே பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வஞ்சூர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி(50). இவரது மகன் சக்திவேல்(30). இவர்கள் இருவரும் நேற்று திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காப்பலூரில் உள்ள உறவினர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சக்திவேல் பைக்கை ஓட்டி வந்துள்ளார். கண்ணமங்கலம் அடுத்த சின்ன அய்யம்பாளையம் காந்திநகர் அருகே பைக் வந்த போது பின்புறமாக வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில், பைக் பின்னால் அமர்ந்திருந்த சாந்தி கீேழ விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகன் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து தனியார் பஸ்சை பறிமுதல் செய்து, டிரைவர் பார்த்தீபன்(36) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பைக் மீது பஸ் மோதி மகன் கண்ணெதிரே தாய் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post பைக் மீது பஸ் மோதி காட்பாடி பெண் பலி மகன் கண்ணெதிரே சோகம் கண்ணமங்கலம் அருகே appeared first on Dinakaran.

Tags : Kannetire ,Kanamangalam ,Kannamangalam ,Kadapadi ,Kannadir ,Sangangalam ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!