×

முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம்

 

திண்டுக்கல், செப்.16: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற செப்.21ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு வருகை தரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களது கோரிக்கை மனுவினை இரட்டைப் பிரதிகளுடன் செப்.21ம் தேதி காலை 9 மணிமுதல் 10 மணிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,District ,Collector ,Boongodi ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...