×

இலங்கை மீனவர்கள் இருவர் சிக்கினர்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரையில் இருந்து 13 கடல் மைல் தொலைவில் 4 நாட்களாக படகு பழுதானதால் கடலில் தத்தளித்த இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த நிக்சன்டிலக்ஸ்(38), சுபத்ரன்(36) ஆகிய 2 நபர்கள் கோடியக்கரை அருகே சிறுதலை காடு கடற்கரையில் நேற்று காலை படகுடன் கரைசேர்ந்தனர். பின்பு அங்கிருந்து 5 கி.மீ., தூரம் கடற்கரை ஓரம் நடந்தபடி, கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதே போல் கியூ பிராஞ்ச், போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post இலங்கை மீனவர்கள் இருவர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam district ,Kodiakarai ,Dinakaran ,
× RELATED நாகை அருகே நடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று எரித்த கணவன்