×

நாட்டு வெடி வெடித்து 2 பேர் பலி

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம், மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (32). இருவரும் கருத்தலக்கம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக வெடிபொருட்கள் வெடித்து தீப்பிடித்தது. இதில் ராஜா, கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

The post நாட்டு வெடி வெடித்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Natham ,Natham, ,Mangammal Road, Dindugul District ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...