×

சதுர்த்தியை முன்னிட்டு ஞானவிநாயகருக்கு குபேரன் அலங்காரம்

திருவெறும்பூர், செப். 15: திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞானவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குபேரன் அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்து மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 10 நாள் விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று குபேரன் அலங்காரத்தில் ஞான விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post சதுர்த்தியை முன்னிட்டு ஞானவிநாயகருக்கு குபேரன் அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Kuberan ,Gnanavinayaka ,Chaturthi ,Thiruverumpur ,Gnanavinayakar ,Police Colony ,Tiruverumpur ,Kubera ,Vinayagar ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா