×

கல்லூரி மாணவர்கள் பனை விதை சேகரிப்பு

பொன்னமராவதி, செப். 15: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் கல்லூரி மாணவர்கள் பனை விதை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட பனை விதைகளை ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் நட அனுப்பி வைக்கப்பட்டது.
மாநில நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலரின் ஆணைக்கிணங்க, பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மூன்று அலகுகள் சார்பில் திருக்களம்பூரில் பனை விதைகள் சேகரிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமையில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கதிரேசன், விண்மதி, ராமு, உதவித்திட்ட அலுவலர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளால் சேகரிக்கப்பட்ட பனை விதைகளை ராமநாதபுரம் கடலோர பகுதிகள் நட அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

The post கல்லூரி மாணவர்கள் பனை விதை சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Melaichivapuri ,Ramanathapuram… ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...