×

சாலையில் புளியமரம் விழுந்து பைக்கில் சென்றவர் பலி கண்ணமங்கலம் அருகே சோகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது

கண்ணமங்கலம், செப்.14: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு பைக்கில் வீடு திரும்பியபோது கண்ணமங்கலம் அருகே சாலையில் புளியமரம் விழுந்ததில் இலங்கை அகதி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கஸ்தம்பாடி கன்னிகாபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் கந்தசாமி(54). இவர் நேற்று உடல்நிலை சரியில்லாததால் பைக்கில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிசிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். பாளைய ஏகாம்பரநல்லூர் கூட்ரோடு அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் சென்று கொண்டிருந்த கந்தசாமி பைக் மீது விழுந்தது.

இதில், பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த கண்ணமங்கலம் எஸ்எஸ்ஐ திருமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post சாலையில் புளியமரம் விழுந்து பைக்கில் சென்றவர் பலி கண்ணமங்கலம் அருகே சோகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியபோது appeared first on Dinakaran.

Tags : Sogam Hospital ,Kannamangalam ,Dinakaran ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!