×

சென்னை ஐகோர்ட் உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிர்த்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்த சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கருத முடியாது என்று வாதிடப்பட்டது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜரானார். கடந்த விசாரணையின்போது வாதங்கள் நிறைவு பெற்றதாக அறிவித்த நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்திருந்தனர். இதையடுத்து, இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

The post சென்னை ஐகோர்ட் உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிர்த்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,CHENNAI ,Madras High Court ,Chennai ICourt ,Dinakaran ,
× RELATED குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால்,...