×

மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம்

 

கோவை, செப். 13: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மேயரிடம் கொடுத்தனர்.

மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 5 மனு, மேற்கு மண்டலத்தில் 5 மனு, வடக்கு மண்டலத்தில் 4 மனு, தெற்கு மண்டலத்தில் 1 மனு, மத்திய மண்டலத்தில் 13 மனு, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 1 மனு என மொத்தம் 29 மனுக்களை மேயர் பெற்றுக்கொண்டார். பின்னர், இம்மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இம்முகாமில், உதவி கமிஷனர்கள் செந்தில்குமார் ரத்தினம் (வருவாய்), சுந்தர்ராஜ் (கணக்கு), செந்தில் (நிர்வாகம்), செந்தில்குமரன் (கிழக்கு மண்டலம்), மகேஷ் கனகராஜ் (மத்திய மண்டலம்), நூர்அகமது (வடக்கு), சந்தியா, பிரேம்ஆனந்த், நகர்நல அலுவலர் டாக்டர் தாமோதரன், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post மாநகராட்சி மக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Corporation People ,Grievance Camp ,Coimbatore ,Coimbatore Corporation ,Mayor ,Kalpana ,Corporation People's Grievance Redressal Camp ,Dinakaran ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்