×

பஸ்சில் பர்ஸ் திருடியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, செப்.13: பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (48). இவர் ஊட்டியில் உள்ள ராணுவதளத்தில் வேலை செய்து வருகிறார். தற்போது கந்தசாமி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வலசையூர் செல்வதற்காக, தனியார் பஸ்சில் புறப்பட்டார். அப்போது அவரது பின்சீட்டில் இருந்த ஒருவர், கந்தசாமியின் பர்ஸை திருடினார். இதை கவனித்த கந்தசாமி, சக பயணிகள் உதவியுடன் திருடிய நபரை கையும், களவுமாக பிடித்தார். தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் அவரை ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவர் அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த திருப்பதி(42) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், பர்ஸை பறிமுதல் செய்தனர்.

The post பஸ்சில் பர்ஸ் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pappirettipatti ,Kandasamy ,Venkatasamutharam ,Ooty ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே தகராறு: இருதரப்பினர் 5 பேர் கைது