×

மறைமலைநகரில் மதுபானம் விற்ற இருவர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: மறைமலைநகரில், மதுபானம் விற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த மறைமலைநகர் நந்தனார் தெருவை சேர்ந்த ரவி (49) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 3 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, மறைமலைநகர் அண்ணா சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த பூந்தமல்லி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பட்டுராஜ் (30) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 3 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

The post மறைமலைநகரில் மதுபானம் விற்ற இருவர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Karamalai Nagar ,Chengalpattu ,Kiramalai Nagar ,Chengalpattu District ,Karamalainagar ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் அருகே 5 ஆயிரம் நெல்...