×

பவித்திரம் சந்தைக்கு ஆடுகள் வரத்து சரிந்தது

சேந்தமங்கலம், செப்.12: தொடர் மழை காரணமாக பவித்திரம் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்தது. இதில் ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. ஈரோடு, காங்கேயம், திருப்பூர், முசிறி, துறையூர், உப்பிலியாபுரம், பச்சைமலை, கோயம்புத்தூர், கொல்லிமலை உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்கவும் வருகின்றனர். மேலும், சுற்றுப்புற பகுதியான நவலடிப்பட்டி, வரகூர், செவிந்திப்பட்டி, வடவத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆடுகள் இறைச்சிக்காக வாங்கிச் செல்லப்படுகிறது. நேற்று கூடிய சந்தையில் ஆடு வரத்து குறைந்தது.

கடந்த சில நாட்களாக, எருமைப்பட்டி வட்டார பகுதியில் கடுமையான வெயில் வாட்டியெடுத்த நிலையில், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் இருந்து குறைவான ஆடுகளே விற்பனைக்கு வந்திருந்தது. சுமார் 270க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. அவைகள் ₹17 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இதேபோல், சுற்று பகுதியில் இருந்து 250க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்கு வந்திருந்தது. அவைகள் ₹1 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹18 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

The post பவித்திரம் சந்தைக்கு ஆடுகள் வரத்து சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Pavitram market ,Senthamangalam ,Pavithram ,Bavitram ,Dinakaran ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்