×

கடையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்

கடையம்,செப்.12: கடையம் அருகே மாதாபட்டினம் சற்குண சத்ய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் தலைமை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 269 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா வரவேற்றார். நிகழ்ச்சியில் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி ரவி சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏபி அருள், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், கீழப்பாவூர் பொன் செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் காளிதுரை, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், ஐந்தாம் கட்டளை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுதன், ஒன்றிய கவுன்சிலர் பாலக செல்வி பாலமுருகன், கிளைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், முருகன், காமராஜ், முத்து, நிர்வாகிகள் கதிரேசன், திரவியம், கருத்தப்பாண்டி, ராமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் நன்றி கூறினார்.

The post கடையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Jayapalan ,Kadayam ,Sarkuna Satya Vidyalaya Higher Secondary School ,Matapattinam ,Khadayam ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது...