×

மூதாட்டியிடம் நகை பறிப்பு

 

ஒட்டன்சத்திரம், செப். 12: ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தம் அருகேயுள்ள அம்மாபட்டி தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உத்தமி (75). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் பராமரிப்பு பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர். உத்தமியும் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அதை வாங்கிய அவர்கள் திடீரென அவரது கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்ெகாண்டு தப்பினர். இச்சம்பவம் குறித்து உத்தமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கள்ளிமந்தயம் போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர் .

The post மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Uttami ,Ammapatti South Garden ,Kallimantam ,Ottanchatra.… ,
× RELATED கோடை வெயிலால் காய்கறி விளைச்சல்...