×

மனைவி மாயம்: கணவர் புகார்

 

ஈரோடு, செப். 11: ஈரோடு வில்லரசம்பட்டி மொக்மையம்பாளையத்தை சேர்ந்தவர் சுதாகர் (30). தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 4ம் தேதி 2 குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டு விட்டு லட்சுமி வீட்டை விட்டு வெளியேறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் லட்சுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து சுதாகர் நேற்று முன்தினம் ஈரோடு வடக்கு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகின்றனர்.

The post மனைவி மாயம்: கணவர் புகார் appeared first on Dinakaran.

Tags : Erode ,Sudhakar ,Villarasambatti ,Mokmayambalayam ,Lakshmi ,Mayam ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...