கரூர், செப்.11: வாகன ஓட்டிகளுக்கு விபத்தை விளைவிக்கும் வகையில், மாநகராட்சி பகுதியில் கால்நடைகள் சுற்றித்திரிவதை கண்காணித்து கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ரயில் நிலைய வளாகம், ரத்தினம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், மக்கள் பாதை, ஐந்து ரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அதிகளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.
இப்பகுதிகளில் ஒரு சிலரால் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள், சாலையில் ஹாயாக சுற்றித்திரிவது, சாலையோரம் படுத்து கிடப்பது போன்ற பல்வேறு செயல்களால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதன் காரணமாக சில பகுதிகளில் விபத்துக்களும் நடந்துள்ளது. எனவே, கால்நடைகள் மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிவதை கண்காணித்து அதனை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கலெக்டர் தகவல் கரூர் நகர பகுதியில் ஹாயாக திரியும் ஆடுகளால் விபத்து அபாயம் அப்புறப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.
