×

தேவகோட்டையில் மாயமானதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக கண்டெடுப்பு: மனைவியிடம் தீவிர விசாரணை

தேவகோட்டை: மாயமானதாக கூறப்பட்ட டிரைவரின் உடல் செப்டிக்டேங்கில் எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, கம்பர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டில் கடந்த 7 வருடங்களுக்கு முன், பாண்டியன் – சுகந்தி குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பாண்டியன் டிரைவர் வேலை பார்த்து வந்தார். வேலை விஷயமாக கோவைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என சுகந்தி கூறியுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சுகந்தி வேறு வீட்டிற்கு சென்று விட்டார். தற்போது தேவகோட்டை வீரபாண்டியபுரம் நடுத்தெருவில் சுகந்தி தையல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சீராளன் வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது செப்டிக் டேங்கில் இருந்து மனித எலும்புக்கூடுகள், கைலி, சட்டை மற்றும் உடைந்த ஜன்னல் கண்ணாடித் துண்டுகள் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மனித எலும்புக்கூடுகள், கண்ணாடி துண்டுகளை கைப்பற்றினர். விசாரணையில் பாண்டியன் அணிந்திருந்த கைலி என தெரிய வந்தது. இதுதொடர்பாக டெய்லர் சுகந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாண்டியன் கொலை செய்யப்பட்டு செப்டிங் டேங்கில் போடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

The post தேவகோட்டையில் மாயமானதாக கூறப்பட்டவர் எலும்புக்கூடுகளாக கண்டெடுப்பு: மனைவியிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Devakotta ,Septicdang ,
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்