×

பிரதமர் மோடி மீது காங். தாக்கு ஏழைகளை வெறுப்பதால் குடிசைகளை மறைக்கிறார்: ஜி20 ஏற்பாடு குறித்து விமர்சனம்

புதுடெல்லி: ஜி20 மாநாட்டிற்கு வரும் உலக தலைவர்கள் கண்ணில் படாமல் இருப்பதாக ஏழைகளின் குடிசை பகுதிகளை துணியால் மூடி மறைத்த பிரதமர் மோடி, ஏழைகளை வெறுக்கிறார் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜி20 மாநாட்டிற்காக பல உலக தலைவர்கள் வந்துள்ள நிலையில், டெல்லியில் சில இடங்களில் சாலையோரம் உள்ள குடிசை பகுதிகள் பச்சை துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. மேலும், தெருவில் சுற்றித் திரிந்த பல தெரு நாய்களை பிடித்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. பாஜ அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ‘‘ஒன்றிய அரசு நமது ஏழை மக்களையும், விலங்குகளையும் மறைக்கிறது. இந்தியாவின் யதார்த்தத்தை நமது விருந்தினர்களிடமிருந்து மறைக்க வேண்டிய அவசியமில்லை’’ என கூறி உள்ளார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், குடிசைப் பகுதிகள் பச்சை துணியால் மூடப்பட்டிருப்பதும், தெரு நாய்கள் கொடூரமாக பிடித்து செல்லப்படுவதையும் காட்டுகிறது. அதில் குடிசைவாசிகள் பேசுகையில், ‘‘எங்களை அரசு பூச்சிகளாக கருதுகிறது.

நாங்களும் மனுசங்க இல்லையா?’’ என கேள்வி கேட்கின்றனர். இந்த வீடியோவுடன் காங்கிரஸ் கட்சி, ‘‘ஜி20 மாநாட்டிற்கு முன்பாக, அனைத்து குடிசை பகுதிகளையும் மூடி, மோடி அரசு தனது தோல்வியை மறைக்கிறது. ஏனெனில் மன்னர் ஏழைகளை வெறுக்கிறார். நாய்கள் கழுத்தில் இறுக்கப்பட்டு, குச்சிகளால் அடித்து கூண்டுகளில்வீசப்படுகின்றன. அவைகளுக்கு உணவு, தண்ணீர் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற கொடூரமான செயல்களுக்கு எதிராக நாம் குரல் எழுப்புவதும், குரலற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோருவதும் அவசியம்’’ என்று பதிவிட்டுள்ளது.

The post பிரதமர் மோடி மீது காங். தாக்கு ஏழைகளை வெறுப்பதால் குடிசைகளை மறைக்கிறார்: ஜி20 ஏற்பாடு குறித்து விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,G20 ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...