- சூலூர்
- இன்ஸ்பெக்டர்
- மாதையன்
- சுலுர் பொலிஸ் நிலையம்
- கோயம்புத்தூர்
- தென்னம்பாளையம் பிரிவு
- படுகாயம்
- தின மலர்
சூலூர்: கோவை மாவட்டம், சூலூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மாதையன். இவர், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தென்னம்பாளையம் பிரிவு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் ஜீப் டிரைவர் சிவக்குமாரும் இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கில் வந்த 2 பேர், இன்ஸ்பெக்டர் மாதையன் சைகை காட்டியும் நிற்காமல் அவர் மீது மோதுவதுபோல் வேகமாக சென்றனர். உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜீப்பில் பைக்கை துரத்திச் சென்றார். டிரைவர் சிவக்குமார் ஜீப்பை ஓட்டினார். வழியில் ஒருவர் மீது பைக் மோதி அதில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர்.
அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் ஜீப்பை திருப்பியபோது, லாரி மீது மோதி பேரிகார்டில் இடித் நின்றது. லாரி நிற்காமல் சென்று விட்டது. இதைய பயன்படுத்தி பைக்கில் இருந்து விழுந்த 2 வாலிபர்களும் தப்பியோடிவிட்டனர். படுகாயம் அடைந்த இன்ஸ்பெக்டர் மாதையன், டிரைவர் சிவக்குமார் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பைக்கில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு விரைவில் தமிழக அரசின் சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post பைக்கில் சென்றவர்களை விரட்டியபோது ஜீப் மீது லாரி மோதி இன்ஸ்பெக்டர் படுகாயம் appeared first on Dinakaran.