×

அக்கரையில் உள்ள வீட்டின் சொத்து பத்திரம் மாயம் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீசில் புகார்

சென்னை: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது குடும்பத்துடன் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு அக்கரையில் உள்ள பங்களா வீடு ஒன்று உள்ளது. வார இறுதி நாட்களில் தான் அக்கரையில் உள்ள பங்களா வீட்டிற்கு தினேஷ் கார்த்திக் தனது குடும்பத்துடன் செல்வார். இந்நிலையில், அக்கரையில் உள்ள பங்களா வீட்டின் சொத்து பத்திரத்தை நகல் எடுக்காமல் வைத்திருந்துள்ளார். இதனால் அவர் அக்கரையில் உள்ள பங்களா வீட்டின் அசல் சொத்து பத்திரத்தை ஜெராக்ஸ் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென அவரது சொத்துப்பத்திரம் மாயமானதாக கூறப்படுகிறது. பல கோடி மதிப்புள்ள அசல் பத்திரம் என்பதால் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் உடனே சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் மாயமான சொத்து பத்திரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கமாக சொத்து பத்திரம் காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தால் போலீசார் புகாரை வாங்குவதில்லை. இவர் கிரிக்கெட் வீரர் என்பதால் அவரது புகாரை போலீசார் வாங்கி விசாரித்து வருகின்றனர்.

The post அக்கரையில் உள்ள வீட்டின் சொத்து பத்திரம் மாயம் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthik ,Akkarai ,Chennai ,Boise Garden ,Chennai.… ,
× RELATED ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’...