×

ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு தேங்காய் கொள்முதல்

ஆனைமலை : பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் கொள்முதல் நடைபெற்றது. ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, ஒடையகுளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 6 விவசாயிகள் 25 மூட்டை என மொத்தம் 16 குவிண்டால் தேங்காய் கொண்டு வந்திருந்தனர்.

இதில் 1 கிலோ தேங்காய் ரூ.22 முதல் அதிக பட்சமாக ரூ.24.30 வரை என சராசரியாக ரூ.24.90க்கு ஏலம் போனது. விவசாயிகள் கொண்டு வந்த மூட்டைகளிலிருந்த தேங்காய் மொத்தம் ரூ.26 ஆயிரத்து 425க்கு விற்பனையானது. இதனை, 6 வியாபாரிகள் வாங்கி சென்றனர். கடந்த வாரம் அதிக பட்சமாக சராசரியாக 1 கிலோ ரூ.22க்கு தேங்காய் ஏலம் போனது. இந்த முறை ரூ.2 கூடுதலாக ஏலம் போனது என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வேல்முருகன் தெரிவித்தார்.

The post ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.40 ஆயிரத்துக்கு தேங்காய் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Animalai ,Pollachi Animalai Orders System ,Kottur ,Sethumadda ,Animalayan Salehouse ,Dinakaran ,
× RELATED 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளை...