×

உதயநிதி குறித்து அவதூறாக பேசிய உபி சாமியார் மீது போலீசில் புகார்

களக்காடு,செப்.8: சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க கோரி களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வகருணாநிதி களக்காடு போலீசில் புகார் அளித்தார். அவருடன் மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், நகரச் செயலாளர் மணி சூரியன், நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், யூனியன் துணைத் தலைவர் விசுவாசம், கருப்பசாமி பாண்டியன், சங்கரி,தேவநல்லூர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், செல்லையா உள்பட பலர் உடன் இருந்தனர்.

The post உதயநிதி குறித்து அவதூறாக பேசிய உபி சாமியார் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : UP ,Udayanidhi ,Kalakadu ,Uttar Pradesh ,Minister ,Udayanidhi Stalin ,Sanathanam ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளிடம்...