×

கீழ் பவானி வாய்க்காலில் மூதாட்டி குதித்து தற்கொலை

ஈரோடு, செப். 8: ஈரோடு அடுத்த பெத்தாம்பாளையம் பி.எஸ்.குப்புசாமி கவுண்டர் வீதியை சேர்ந்த ராமசாமி மனைவி ராமாயம்மாள் (80). இவர், அவரது மூத்த மகன் தெய்வசிகாமணி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ராமாயம்மாள் பேரன் திருமணமான பெண்ணை மறுமணம் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால், பேரனிடம் அப்பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என ராமாயம்மாள் அறிவுறுத்தினார். இதற்கு ராமாயம்மாளின் பேரன் ஒப்புக்கொள்ளாமல், அதே பெண்ணை திருமணம் செய்யதாக உறுதியாக கூறியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ராமாயம்மாள் பெத்தாம்பாளையம் அடுத்த கருக்கம்பாளையம் கீழ் பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிக்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராமாயம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காஞ்சிக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கீழ் பவானி வாய்க்காலில் மூதாட்டி குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Lower Bhavani canal ,Erode ,Ramasamy ,Ramayammal ,P. S. Kuppusamy ,Pettampalayam ,Bhavani ,
× RELATED சட்டவிரோத மது விற்பனை; பெண் உள்பட 7 பேர் கைது