×

விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை ஆணுக்கு தெரியாது: உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை ஆணுக்கு கொடுமையாக தெரியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு, 2006ம் ஆண்டு குழந்தை பிறந்த பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி மனைவி விண்ணப்பித்திருந்தார். ஆனால், விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விவகாரத்து வழங்க மறுத்துவிட்டன. இதையடுத்து மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷாந்த், பெண்ணின் கணவர், தாம்பத்ய உறவு இல்லாத காலத்தில் தனது மனைவி குழந்தை பெற்றிருப்பதாகவும் இதனால் தகாத உறவில் இருந்திருக்கலாம் என்பதால் அவரை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி துன்புறுத்தினார். அப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையின் அடிப்படையில் விவாகரத்து கோரப்படுகிறது என்று வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள், “இந்து திருமண சட்டம் 1955 பிரிவில் பல்வேறு கொடுமைகளின் அடிப்படையில் விவாகரத்து வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், மனைவி விவாகரத்து கோரும் வழக்கில், பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை ஆணுக்கு கொடுமையாக தெரியாது. எனவே, நீதிமன்றம் அதனை சற்று கூடுதல் சுதந்திரத்துடனும் சூழ்நிலைக்கு ஏற்பவும் அணுக வேண்டும்,’’ என்று கூறி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.

The post விவாகரத்து வழக்கில் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை ஆணுக்கு தெரியாது: உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஒரு கோடி வாக்காளர்களை நீக்க பா.ஜ.க....