×

தவறான சுனாமி எச்சரிக்கையால் கோவாவில் மக்கள் பீதி

பனாஜி: கோவாவில் பனாஜி புறநகர் பகுதியில் அமைந்துள்ள போரிவோர்ம் அருகே உள்ள முன்னெச்சரிக்கை பரப்பும் மையத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த அறிவிப்பினால் மக்கள் குழப்பத்தில் பீதி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மாமு ஹாகே கூறுகையில், “எந்த அதிகாரியும் சுனாமி எச்சரிக்கை விடுக்கும்படி அறிவுறுத்தவில்லை. எனவே இது தவறான எச்சரிக்கையாகும்,” என்று தெரிவித்தார். இது குறித்து மாநில நீர்வள துறை விசாரணைக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

The post தவறான சுனாமி எச்சரிக்கையால் கோவாவில் மக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Goa Panaji ,Borivorm ,Panaji ,Goa ,Dinakaran ,
× RELATED ஜூலை மாதத்திற்குள் 10-15 மாநிலங்களில்...