×

தஞ்சையில் சோகம்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாயும், மகனும் பரிதாப உயிரிழப்பு..!!

தஞ்சை: தஞ்சாவூரில் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாயும், மகனும் லாரி மோதியதில் உயிரிழந்த நிகழ்வு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் செரினா பேகம். இவரது கணவர் செல்போன் கடை வைத்துள்ளார். இவர் தனது மகள் (7ம் வகுப்பு) சபீகா, மகன் (எல்.கே.சி.) சைபு என இரண்டு குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். பள்ளி செல்வதற்கு இன்னும் 100 அடி தூரமே உள்ள நிலையில், எதிரே வந்த லாரியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியுள்ளது.

இதில் 20 மீட்டர் தொலைவில் இருசக்கர வாகனம் இழுத்து செல்லப்பட்டு தாய் செரினா பேகம் 2 குழந்தைகள் கண் முன்னே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.

படுகாயமடைந்த மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். பள்ளி அருகே வேகத்தடை அமைக்காததால் விபத்து நேரிட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் சிக்கி இரு குழந்தைகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் அனைவரின் மனதை நொறுங்க செய்துள்ளது.

The post தஞ்சையில் சோகம்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தாயும், மகனும் பரிதாப உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thanju ,Pharadhaya ,Tanjana ,Thanjavur ,
× RELATED சென்னை மற்றும் தஞ்சையில்...