×

விமானத்தில் இயந்திர கோளாறு விமானி சாதுர்யத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 58 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 64 பேருடன் நேற்று காலை 10.30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. இந்நிலையில் விமானத்தை இயக்கும் முன்பு விமானத்தின் இயந்திரங்களின் இயக்கத்தை சரிபார்த்தபோது, அதில் இயந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானத்தில் உள்ள பயணிகள் கீழே இறக்கப்பட்டனர்.விமான பொறியாளர்களால் பகல் 12 மணி வரை விமானத்தின் இயந்திரங்களை சரி செய்ய முடியவில்லை. இதனால் 58 பயணிகளை மாற்று விமானம் மூலம் ஹூப்ளிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஜின் கோளாறை கண்டுபிடித்த விமானியை பலரும் பாராட்டினர்.

The post விமானத்தில் இயந்திர கோளாறு விமானி சாதுர்யத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indigo Airlines ,Hubli, Karnataka ,
× RELATED மீனம்பாக்கம் விமான நிலையத்தில்...