×

டேங்கர் லாரி வெடித்து தீ ஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு நெருப்புக்கு இரையான 92 பேர்

ப்ரீடவுன்: சீய்ரா லியோனில் பெட்ரோல் டேங்கர் வெடித்து சிதறியதில் 92 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான சீய்ரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் உள்ள வெலிங்டனில் டேங்கர் மீது பஸ் ஒன்று மோதியது. இதனால் டேங்கரில் இருந்து பெட்ரோல் கசிந்துள்ளது. இதை பிடிப்பதற்காக மக்கள் கூட்டம் கூடியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து ஏற்பட்ட ஜூவாலைகள் வானத்தில் பெரிய தீப்பிழம்பாக காட்சியளித்தது. இந்த விபத்தில் 92 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சீய்ரா லியோன் தேசிய பேரிடர் மீட்டு குழுவினர் தொடர்ந்து போராடி காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து குறித்து தகவலறிந்த சீய்ரா லியோன் அதிபர் ஜூலியஸ் மாடா பயோ டிவிட்டரில், ‘விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். …

The post டேங்கர் லாரி வெடித்து தீ ஓசி பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு நெருப்புக்கு இரையான 92 பேர் appeared first on Dinakaran.

Tags : Freetown ,Sierra Leone ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் யுகத்தில் தொடரும் அறிவுசார் சொத்துக்கள் திருட்டு