×

காரியாபட்டி அருகே தணிக்கை உதவி ஆய்வாளர் கார் மோதி பரிதாப சாவு

திருச்சுழி, செப்.6: காரியாபட்டி அருகே சாலை விபத்தில் தணிக்கை உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் விருதுநகர் மாவட்ட உள்ளாட்சி நிதி தணிக்கையின் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் தோணுகால் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல்லைச் சேர்ந்தவர் ஓட்டி வந்த கார் முருகானந்தம் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மல்லாங்கிணறு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மல்லாங்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காரியாபட்டி அருகே தணிக்கை உதவி ஆய்வாளர் கார் மோதி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Audit ,Kariyapatti ,Thiruchuzhi ,Muruganantham ,Tirutangal ,
× RELATED குடிநீர் தங்குதடையின்றி கிடைக்க...