×

வியாபாரி வீட்டில் 10 பவுன் திருட்டு

சேலம், செப்.6: சேலம் அன்னதானப்பட்டி சந்தைப்பேட்டை பரமசிவம் காலனியை சேர்ந்தவர் செல்வகுமார்(36). கற்பூர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் துறையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அவர் சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் கதவை பூட்டாமல் வைத்துவிட்டு செல்வகுமார் தூங்கினார். பின்னர் எழுந்து பார்த்தபோது வீட்டிலிருந்த 10 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். தான் தூங்கியபோது, எனது டிரைவர் தமிழ்மணி வீட்டிற்கு வந்து சென்றார் எனவும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post வியாபாரி வீட்டில் 10 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Salem ,Selvakumar ,Paramasivam Colony ,Annadhanapatti market ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...