×

விபத்தில் மூளைச்சாவு சமையல்காரர் உறுப்புகள் தானம்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு (43). சமையல்காரரான இவர், கடந்த 3ம்தேதி துவரங்குறிச்சி பகுதியில் ஒரு திருமண விழாவில் சமைக்க சென்று விட்டு மருதம்பட்டிக்கு காரில் திரும்பி கொண்டிருந்தபோது கார் மோதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து ராசுவின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர். அதன்படி அவரது உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. அதில் இதயம் சென்னைக்கும், நுரையீரல் புதுக்கோட்டைக்கும், ஒரு கிட்னி மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி மற்றும் கண்கள் திருச்சி மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.

The post விபத்தில் மூளைச்சாவு சமையல்காரர் உறுப்புகள் தானம் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Rasu ,Marutambatti ,Manaparai, Trichy district ,Duvarangurichi ,Dinakaran ,
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...