×

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு: காதலனுக்கு போலீஸ் வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கையை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை ஜாம் பஜார் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சென்னை குன்றத்தூரை சேர்ந்த திருநங்கை சுக்ரியா என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், தினந்தோறும் கார்த்திக் மது அருந்தியதால் சுக்ரியா, கார்த்திக்கிடம் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக். நேற்று முன்தினம் சோமங்கலம் அருகே வரதராஜபுரம் சுங்கச்சாவடி பகுதியில் நின்றிருந்த சுக்ரியாவை அரிவாளால் முகத்தில் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

அப்போது, சுக்ரியாவின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு திருநங்கைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய திருநங்கையின் காதலன் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு: காதலனுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,CHENNAI JAM… ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்