×

முகப்பேரில் ஓடஓட விரட்டி மீன் வியாபாரி வெட்டிக்கொலை: தப்பிய 6 பேருக்கு வலை

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் (எ) ஜெகதீசன் (45). முகப்பேர் பகுதியில் வசித்து வந்த இவர், அதே பகுதியில் உள்ள ரெட்டி பாளையம் சாலையில் மீன் கடை நடத்தி வந்தார். நேற்று கடையில் வழக்கம்போல், வியாபாரம் செய்து கொண்டிருந்தார். இரவு 7.45 மணி அளவில் அங்கு வந்த 6 பேர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர். சுதாரித்துக்கொண்ட ஜெகன், அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் ஓடஓட விரட்டிச் சென்று, சரமாரியாக வெட்டினர். அதில், சம்பவ இடத்திலேயே, அவர் துடிதுடித்து இருந்தார். இதையடுத்து, மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

தகவலறிந்து வந்த நொளம்பூர் போலீசார், ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், கடந்த ஜூலை மாதம் ஜெகன் புதியதாக மீன் கடை திறந்து, வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. தொழில் போட்டி காரணமாக இவரை கொலை செய்தார்களா? அல்லது முன்விரோதத்தில் வெட்டி கொலை செய்தார்களா? என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர். மக்கள் அதிகம் நடமாட்டம் நிறைந்த பிரதான சாலையில் மீன் வியாபாரியை மர்ம நபர்கள் ஒட ஒட விரட்டி வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post முகப்பேரில் ஓடஓட விரட்டி மீன் வியாபாரி வெட்டிக்கொலை: தப்பிய 6 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Fishmonger ,CHENNAI ,Jagan (A) Jegatheesan ,Thanjavur district ,Mukappher ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...