×

கிளுவன்காட்டூரில் பரமேசுவரன் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை, செப்.5:உடுமலை அருகே கிளுவன்காட்டூரில் உள்ள பரமேஸ்வரன், சித்திவிநாயகர், முருகப்பெருமான்,  நந்தியம் பெருமாள் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள்,யாகம் வளர்த்தல்,முளைப்பாலிகை எடுத்தல்,வாஸ்து சாந்தி ஹோமம்,பூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தன.செப்டம்பர் 3-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 2 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post கிளுவன்காட்டூரில் பரமேசுவரன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Parameswaran Temple Kumbabhishekam ,Kluvankatur ,Udumalai ,Parameswaran ,Siddhivinayakar ,Murugaperuman ,Nanthiyam Perumal Temples ,Temple Kumbabhishekam ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு