×

தாமரைப்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் பவர் வீடர் வழங்கும் நிகழ்ச்சி: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு

பெரியபாளையம்: தாமரைப்பாக்கம் ஊராட்சியில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் வேளாண் இயந்திர மயமாக்கல் இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் கீதா துளசிராமன் தலைமை தாங்கினார். எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடுவெளி தங்கம் முரளி, திருவள்ளூர் வேளாண் உதவி செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி பொறியாளர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு 5 பயனாளிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், கோடுவெளி குமார், வெங்கல் பாஸ்கர், பி.ஜி.முனுசாமி, தாமரைப்பாக்கம் பாஸ்கர், கோடுவெளி அன்பு, வெள்ளியூர் முன்னால் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

The post தாமரைப்பாக்கம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பவர் டில்லர் பவர் வீடர் வழங்கும் நிகழ்ச்சி: கிருஷ்ணசாமி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thamaraipakkam panchayat ,Krishnasamy MLA ,Periyapalayam ,Thiruvallur district ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்