×

2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு: ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஷீரி பாரமுல்லா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் மூலம் ஜம்மு – காஷ்மீர் தொடர்பான அனைத்து தகவல்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்டதும் தெரியவந்தது. அவர்களின் உத்தரவின் பேரில், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கைது செய்யப்பட்ட இரு தீவிரவாதிகளும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 2 தீவிரவாதிகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Jammu ,Lashkar ,Baramulla ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...