×

ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்த போது… ‘நீ என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த’ – சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ

சென்னை: ஈழப்போரின் போது, ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்த போது, நீ என்ன பன்ன… என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த என்று சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வேண்டாம் சீமான்… வேண்டாம். இப்ப கூட நீங்க எடுத்து கொண்டிருக்கும் பாதை ரொம்ப தப்பாத்தான் எடுத்துக்கிட்டு இருக்க. எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறீயா. உனக்கு என்ன டா இருக்கிறது தகுதி. ஈழப்போரில் வந்து ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருக்கும் போது, என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த. எல்லாம் வெளியில் வரத்தானே போகிறது. நாவை அடக்கிக்கோ சீமான். நாவை அடக்கிக்கோ.

ஒரு பெண்ணோட விஷயத்தில் கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் நடந்துக்கோ. எதிரில் மட்டும் நீ கிடைத்த உன் பற்களை தட்டி கொடுத்துவிடுவேன் சீமான். வேண்டாம் சீமான்… வேண்டாம் என்ன. ஒரு பெண்ணோட விஷயத்தில் ரொம்ப விளையாடிக்கிட்டு இருக்க. ரொம்ப சிரிச்சிக்கிட்டு இருக்க. இப்ப வந்து 6 பேர் மேல நான் வழக்கு கொடுத்து இருக்கேன். 6 பேருடன் நான் குடும்பம் நடத்தி இருக்கேனா. அப்புறம் எதுக்கு எனக்கு மார்ச் மாதத்தில் இருந்து காசு போட வந்த. விளையாடிக்கிட்டு இருக்கியா. மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கியா. என் காலில் இருக்கும் செருப்பை கழற்றி சாத்து சாத்துனு சாத்துவேன் சீமான். வேண்டாம் சீமான். கொஞ்சமாவது நீ மனச்சாட்சியுடன் பெண் என்று நடந்துக்கோ. இந்த மாதரி பொய்களை சொல்லிக்கிட்டு மக்களை ஏமாற்றாதே.

திமுகவில் இருந்து எல்லோரையும் எதுக்கு இழுத்துக்கிட்டு வந்த. உனக்கு பேசுவதற்கு யோக்கியதை இல்லாமல். நீ வந்து என்னை ஏமாற்றிவிட்டு, இது வந்து அரசியல் பின்னால் இருக்கிறது. அரசியல் பின்னால் இருக்கிறது என்று சொல்ற. எதிரே மட்டும் நீ கிடைத்த சாத்து சாத்துனு சாத்திவிடுவேன் சீமான். இப்ப கூட உனக்கு காலம் மிஞ்சி போகவில்லை. ஒரு பெண் என்று மனதில் வைத்து, நியாயமாக எடுத்துக்கிட்டு போனேனா. இது நியாயமாக முடியும். இல்லையென்றால் என்னை பற்றி நீ அவதூறு பேச பேச.., நான் அடங்கவே மாட்டேன் சீமான். என்னை பற்றி உனக்கு தெரியும். அதனால விளையாட வேண்டாம் என்ன? என்ன பேசுறதுனு யோசித்து பேசு. போலீஸ் மட்டும் இல்லையென்றால் சென்னைக்கு வந்து முதலில் உன் வீட்டுக்கு வந்து சாத்து சாத்துனு சாத்துவேன்.

நான் அவ்வளவு கோபத்தில் இருக்கேன். வெறுப்பு ஏற்றாதே. என்ன பன்னனுமோ உனக்கு தில்லு இருந்தா நீ நேர்மையாக பன்னு. பிரஸ் மீட்டில் அமர்ந்து கேவலம் என்று சொன்னால் ஒரே அப்பு அப்பிடுவேன் சொல்லிட்டேன். ேவண்டாம் உனக்கு என்னை பற்றி தெரியும் என்று நினைக்கிறேன். என்னை வந்து கோபப்படுத்தாதே. அதை தான், நான் இந்த வீடியோ மூலம் உனக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன். கேவலம் கேவலம் என்று நீ சொல்லிக்கிட்டே இருந்தனு நினைச்சுகோ. நேரில் பார்க்கும் போது மூஞ்சை பார்த்து சாத்து சாத்துனு சாத்திவிட்டுவிடுவேன் பார்த்துக்கோ. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

The post ஈழப்போரில் ஈழத்தமிழர்கள் எல்லாம் செத்துக்கிட்டு இருந்த போது… ‘நீ என்னுடன் தானே ஆட்டம் போட்டு கொண்டிருந்த’ – சீமான் குறித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ appeared first on Dinakaran.

Tags : Elamites ,Eelam war ,Vijayalakshmi ,Chennai ,Eelamites ,
× RELATED இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச...