×

கஞ்சா வைத்திருந்தவர் கைது

தில்லைநகர், செப்.4: உறையூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோயில் அருகே நேற்றுமுன்தினம் உறையூர் காவல் உதவி ஆய்வாளர் கோப்பெருஞ்சோழன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த உறையூர் பாண்டமங்கலம் அக்ரஹாரத்தை சேர்ந்த காளீஸ்வரன் (21) என்பவரை பிடித்து விசாரித்ததில் இவர் கையில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post கஞ்சா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thillanagar ,Varayur ,Trichy Varayur ,Kamachi Amman Temple ,
× RELATED சிக்கன் கடைக்காரரிடம் பணம் பறித்தவர் கைது