×

கோழி கறிக்கடையில் தீ விபத்து

திருச்சி, செப்.4: திருச்சி பாலக்கரை பகுதியில் கோழிக்கறி கடையில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். திருச்சி பாலக்கரை எடத்தெரு கிருஷ்ணன் கோவில் பகுதியில் ஒரு கோழி கறி கடை இயங்கி வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் கடை ஊழியர்கள் காலையில் கோழிக்கறியை உறிப்பதற்காக வெண்ணீர் வைக்க காஸ் அடுப்பை பற்ற வைத்தனர். ஏற்கனவே காஸ் கசிவு ஏற்பட்டிருந்தது தெரியாமல் ஸ்டவ்வை பற்ற வைத்ததால் ஸ்டவ்வில் இருந்து தீ மளமளவென்று கடை முழுவதும் பரவி எரியத்துவங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்த தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடம் விரைந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post கோழி கறிக்கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Tiruchi ,Palakkarai ,Dinakaran ,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்:...