×

கட்டிட தொழிலாளிகள் இருவர் மாயம்

 

விருதுநகர், செப். 4: விருதுநகர் அருகே ஆமத்தூரை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (30) பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். கணவர் மாடசாமி (36) கட்டிட வேலை செய்து வருகிறார். இரு குழந்தைகள் உள்ள நிலையில் மாடசாமி கடந்த ஆக.11ல் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பேச்சிம்மாள் புகாரில் ஆமத்தூர் போலீசார் மாடசாமியை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஓண்டிப்புலிநாயக்கனூரை சேர்ந்த மாரியப்பன் (45) கட்டிட வேலை செய்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 வருடங்களாக தனியே வசித்து வந்தார். கட்டிட வேலைக்கு சென்ற மாரியப்பனை காணவில்லை என அண்ணன் முத்தையா புகாரில் ஆமத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.

The post கட்டிட தொழிலாளிகள் இருவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Pachiyammal ,Amattur ,
× RELATED தணிக்கை குழு சார்பில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் ஆய்வு