×

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 4 பெண்கள் அதிரடி கைது

திருமலை: ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள ‘கோகைன்’ போதை பொருள் கடத்திய 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் லாவோஸ் நாட்டில் இருந்து டெல்லி வழியாக வந்த சில பயணிகளின் உடைமைகளை புலனாய்வு அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர்.

அப்போது 4 பெண் பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அந்த 4 பெண்கள் ெகாண்டு வந்த பைகளை தீவிரமாக சோதனை செய்தனர். இதில் 4 பைகளில் 5 கிலோ கோகைன் என்ற போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கோகைனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில், தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ் நகரில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

The post ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.50 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 4 பெண்கள் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Shamshabad airport ,Tirumalai ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...