×

மாதவரம் 200 அடி சாலையில் சாலையை தூய்மைப்படுத்தும் வாகனம் தீப்பிடித்து எரிந்தது: டிரைவர் உயிர் தப்பினார்

திருவொற்றியூர்: மாதவரம் 200 அடி சாலையில் மணலை அப்புறப்படுத்தியபோது வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் இரண்டு புறமும் குவிந்து கிடக்கும் மணலை உறிஞ்சி எடுக்கும் வாகனம் உள்ளது. இந்த வாகனம் மூலம் இன்று அதிகாலை மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மஞ்சம்பாக்கம், கொசப்பூருக்கு இடையே மாதவரம் 200 அடி சாலையில் சாலையோரம் உள்ள மணலை தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தது.

அப்போது வாகனத்தில் இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென்று புகை வந்த நிலையில், தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய துவங்கியது. இதனால் டிரைவர் வாகனத்தைவிட்டுவிட்டு இறங்கி ஓடியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணலி, மாதவரம் பகுதிகளில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமாகியது. இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மாதவரம் 200 அடி சாலையில் சாலையை தூய்மைப்படுத்தும் வாகனம் தீப்பிடித்து எரிந்தது: டிரைவர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.

Tags : Mathavaram ,Chennai Corporation ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...