×

மெரினா பகுதியில் 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை; பெண்ணை நல்வழிப்படுத்தி நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்த ஐஸ் அவுஸ் போலீசார்

சென்னை: மெரினா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்து வந்த பெண்ணை, ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் நல்வழிப்படுத்தி அவருக்கு நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்துள்ளார். சென்னை ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள்(42). இவர் அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி இரவு நேரங்களில் மெரினா கடற்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு ேமலாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தார். பாலம்மாள் மீது ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. பல முறை கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த வழக்கில் பாலம்மாள் கைது செய்தாலும், அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார்.

இதையடுத்து ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணராஜ், பாலம்மாளை அழைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதற்கு பதில், ஏதாவது உனக்கு தெரிந்த தொழில் அமைத்து கொடுத்தால் குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பியா என்று கேட்டுள்ளார். அதற்கு முதலில் பாலம்மாள் எனக்கு தெரிந்து தொழில் ஒன்று தான் சார். ஒரு மதுபாட்டில் விற்றால் எனக்கு 30 ரூபாய் கிடைக்கும், ஒரு நாளைக்கு நான் 50முதல் 100 மதுபாட்டில்கள் விற்பனை செய்வேன் என்று கூறியுள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டர், உணக்கு திருந்தி வாழ ஒரு வாய்ப்பு ஏற்பாடு ெசய்து கொடுகிறோம், இனி மதுபானம் விற்பனை செய்தால் வெளியே வராத வழக்கில் கைது செய்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் பிறகு பாலம்மாள் எனக்கு டிபன் கடை அமைத்து கொடுத்தால் இனி நான் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை ெசய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார். அதைதொடர்ந்து ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் இணைந்து, நடமாடும் சைக்கிள் மூலம் டிபன் கடை அமைத்து தர ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், அதற்கு தேவையான சைக்கிள், காஸ் ஸ்டவ், அரிசி மற்றும் பாத்திரங்கள், மளிகை பொருட்கள் மொத்தமாக வாங்கி, பாலம்மாள் மற்றும் அவரது மகள் பவானியிடம் கொடுத்துள்ளனர்.

அதன்பிறகு பாலம்மாள் இனி நான் எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன். டிபன் கடை மூலம் நான் உழைத்து சாப்பிடுவேன் என்று ஐஸ்அவுஸ் போலீசாரிடம் உறுதி அளித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை நல்வழிப்படுத்தி அவருக்கு டிபன் கடை அமைத்து கொடுத்த ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் மற்றும் போலீசாருக்கு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

The post மெரினா பகுதியில் 10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை; பெண்ணை நல்வழிப்படுத்தி நடமாடும் டிபன் கடை அமைத்து கொடுத்த ஐஸ் அவுஸ் போலீசார் appeared first on Dinakaran.

Tags : Ice Aus ,Tiffon ,Marina ,Chennai ,Iceaus ,Dinakaran ,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...