- அரசு மேல்நிலைப்பள்ளி
- கூடலூர்
- குடலூர்
- தமிழ்நாடு அரசு
- தலைமை ஆசிரியர்
- ஐயப்பன்
- கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி
கூடலூர், செப்.3: கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துணை தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, கூடலூர் நகர கழக செயலாளர் இளஞ்செழியன், நகர் மன்ற உறுப்பினர் வெண்ணிலா சேகர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி துவங்கி வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர் நாகநாதன், கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், கூடலூர் நகர கழக துணை செயலாளர் ஜபருல்லா, மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் தங்கராஜ், நகர் மன்ற உறுப்பினர் வர்கீஸ், தகவல் தொழில் நுட்ப அணியின் நகர ஒருங்கிணைப்பாளர் அபுதாகிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளிமாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.
