×

மணவாளக்குறிச்சி அருகே மீனவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

குளச்சல்,செப் 3: மணவாளக்குறிச்சி அருகே கடியபட்டணம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப்பாத். இவரது மகன் ஆன்றோ ஜெனிஸ்ராஜ் (33). எம்.பி.ஏ. படித்துவிட்டு சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஜெனிஸ் ராஜ் விசைப்படகுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு அங்குள்ள ஒரு கடைக்கு சென்றார். அப்போது அங்கு ஜிம்சோன் (23) என்ற வாலிபருக்கும் ஆன்றோ ஜெனிஸ் ராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆன்றோ ஜெனிஸ் ராஜ் ‘உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதற்கு திட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜிம்சோன் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆன்றோ ஜெனிஸ்ராஜ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் ஜிம்சோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணவாளக்குறிச்சி அருகே மீனவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Manavalakurichi ,Kulachal ,Josephath ,Katiyapatnam Antoniyar Street ,Anro Genisraj ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது