×

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மோதல்: கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு

 

கோவை, செப். 2: கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடியபோது ஏற்பட்ட மோதலில் மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் இருதரப்பு மாணவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால் ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானம் செய்தனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த சில மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியே செல்லும் போது, ஒரு மாணவரை பிடித்து தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அந்த மாணவரை சிலர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தாக்கிய 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் மோதல்: கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Oonam festive ,Govai ,Onam ,Goa ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!