×

திருத்துறைப்பூண்டியில் ராகவேந்திர சுவாமி ஆராதனை பெருவிழா

 

திருத்துறைப்பூண்டி, செப். 2: திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலை, கீழ சிங்களாந்தி அரிமா லியோ முத்து வளாகம், முல்லை ஆற்றங்கரையில் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் 352 ஆராதனை பெருவிழா நடைபெற்றது. விழாவை ஒட்டி, திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் இருந்து பால் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ராகவேந்திர சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மங்கல இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் பெற்றோருக்கு சிறப்பு பூஜையும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மதியம் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெகதீசன், செல்வராஜ், பரந்தாமன், சந்திரகாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post திருத்துறைப்பூண்டியில் ராகவேந்திர சுவாமி ஆராதனை பெருவிழா appeared first on Dinakaran.

Tags : Raghavendra Swami Aradhana festival ,Thirutharapoondi ,Thiruthaurapoondi ,Vedaranyam Road ,Lower Singhalanti Arima Leo Muthu Complex ,Mullai… ,Thiruthuraapoondi ,
× RELATED ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்