×

தெற்கு மாவட்ட திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அணியினர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றனர்

 

திருமங்கலம், செப்.1: மதுரை தெற்கு மாவட்ட திமுகவில் புதியதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரணியினர் நேற்று மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுரை தெற்கு மாவட்ட திமுகவில் வழக்கறிஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக செல்வராஜ், துணைத்தலைவராக ராமசந்திரன், அமைப்பாளர் சிவனேசன் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை அமைப்பாளர்களாக கவிஸ்ரீ தினேஷ், வையத்துரை, அரவிந்த், சின்னராஜா, ரேவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரணி நிர்வாகிகள் நேற்று திருமங்கலம் திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடபட்டி மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தெற்கு மாவட்ட திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அணியினர் மாவட்ட செயலாளரிடம் வாழ்த்து பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : South District DMK ,District Secretary ,Tirumangalam ,Madurai South District ,DMK ,Sedapatti Manimaran ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுகவினர் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்