×

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், பிரசித்தி பெற்ற  பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோய் இன்றி வாழவும் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

முன்னதாக மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உற்சவர் வெள்ளி அலங்காரத்தில் கோயிலை மூன்று முறை சுற்றி தேர்பவனியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhavani Amman temple ,Periyapalayam ,Tiruvallur district ,Avani ,Thiruvilakku Pooja ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...