×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை நம்மையா மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (29), தனியார் நிறுவன ஊழியர். பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த துர்காதேவி (27). இருவரும் 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். துர்காதேவி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறொரு மாப்பிள்ளை பார்த்தனர். இதை அறிந்த துர்காதேவி நேற்று முன்தினம் வீட்டைவிட்டு வெளியேறி காதலன் ரமேஷின் வீட்டில் தஞ்சம் அடைந்தார். அதை தொடர்ந்து நேற்று வேப்பேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் ரமேஷின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி காதல் ஜோடி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்றது.

The post காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Ramesh ,Nagiiya Mestri Street ,Puduvannarappet ,Durgadevi ,Perambur ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...